• இயேசு கிறிஸ்து யார்?(36)

    வாழ்கையின் இரகசியம்

    jesus36

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம இயேசப்பா நிறைவான பாத்திரங்களை பற்றி நமக்கு சொல்லி கொடுத்து நாம இந்த உலகத்தில் அழைக்கப்பட்டதற்கான நோக்கம் என்னன்னு அழகாக சொல்லி கொடுத்தாங்க. ஆனாலும் நம்ம மனதில இன்னும் சில வேதனைகள் இருக்கலாம். ஏன்னா நம்ம இயேசப்பா நம்மகிட்ட நிறைவான பாத்திரங்கள் பற்றி சொல்லும் போது, ஐயோ……நான் இப்படி இல்லையே……அப்ப என்னுடைய தேவன் என்னை பரலோகத்தில சேர்க்க மாட்டாங்களா……..ன்னு உங்களை தேற்றிக் கொள்ள நினைத்தாலும் மனதில கதறினது அவருக்கு புரியும்.

    ஆனா உங்களுக்கு தெரியுமா குட்டிகளா, வெறும் அப்பா….அப்பான்னு சொல்லுறதாலாயோ இல்லை அப்பா, நான் ஒரு பாவின்னு மட்டும் ஒத்துக் கொள்ளுரதாலாயோ நாம பரலோகத்தில வசிக்க முடியாது. அவர் பிள்ளைகளா வாழுறது மட்டுமே, அவர் வார்த்தையின் படி வாழுவது மட்டுமே பரலோகத்திற்கான ஒரே வழின்னு நம்ம இயேசப்பா ஏற்கனவே மத்தேயு புத்தகத்தில சொல்லி இருப்பாங்க. அது மட்டுமில்ல குட்டிகளா, இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லி இருப்பாங்க. அது என்னதுன்னா நம்ம இயேசப்பா பேரால அதிசயங்களும், அற்புதங்களும் செய்தாலும், தீர்க்கக்தரிசனங்கள் சொன்னாலும், பிசாசுகளை விரட்டினாலும், அவர் சொற்படி வாழலைன்னா அவங்க கூட பரலோகத்தில நுழைய முடியாதாம். என்ன குட்டிகளா, இயேசப்பா சொன்ன வழி ரொம்பவே கஷ்டமா தெரியுதா?

    ஆனா நம்மளை பலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய நமக்கு பெலன் உண்டு. அதுனால நம்ம இயேசப்பா சொன்ன வார்த்தைகளை கேட்டவுடன் தயங்க வேண்டாம், சோர்ந்து போகவும் வேண்டாம்.

    சரி குட்டிகளா, நம்ம இயேசப்பா ஆதாம், ஏவாளை எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில கடிந்து கொண்டாங்க என்பதை அழகாக நமக்கு சொல்லி கொடுத்தாங்க. அது மட்டுமில்ல அது நம்ம தேவனுக்கு எப்படிப்பட்ட வேதனையை தரதுன்னும் தெளிவா நம்ம இயேசப்பா சொன்னாங்க. இதன் மூலமா நம்ம இயேசப்பா நமக்கு சொல்ல ஆசைபடுற ரொம்பவே முக்கியமான காரியம், அவர் கடிந்து கொள்ளுதலுக்கு ஆளாகிற நாம ஒரு வகையில பாக்கியவான்கள். ரொம்பவே உங்க முகத்தில் சந்தோசம் தெரியுது குட்டிகளா, தேங்க்ஸ். எங்க இயேசப்பா நாங்க தப்புகளோ இல்லை சில தவறுகளோ செய்யும் போது உண்மையிலேயே கடிந்து கொள்ளுறாங்க…..எங்களால் தாங்கி கொள்ளுகிற அளவுக்கு சில சின்ன தண்டனைகள் கொடுக்கிறாங்க. அப்ப நாங்க எங்க இயேசப்பா கண்களில் தயவு பெற்றவங்களா? உங்க எல்லா கேள்விகளுக்காவும் நன்றிகள் குட்டிகளா. ஏன்னா எப்ப நாம நம்ம இயேசப்பா நாம செய்கிற தவறுகளையும் கண்டு, அதன் மேல் கோபம் கொண்டு, அந்த காரியத்தில இருந்து நம்மளை விடுவிக்க சில தண்டனைகள் கொடுக்கிறதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுதோ, அப்பவே நாம நம்ம இயேசப்பாவின் அன்பை ருசிக்க ஆரம்பிச்சிட்டோம்ன்னு அர்த்தம்.

    என்னது உண்மையா, அப்ப நாங்க எங்களை நேசிக்கிற எங்க இயேசப்பாவின் அன்பை ருசிக்க ஆரம்பிச்சிட்டோமா……இதற்கு முன்னாடி எங்களுக்கு இந்த மாதிரி தோணினதில்லை. ஆனா இப்ப என்னவோ மனதில எங்க இயேசப்பா அன்பை எப்படியாவது வாங்கிடனும், அவர் எங்க மேல அன்பா இருக்கிறதை தெரிந்து கொள்ளணும்ன்னு தோணுது. எதுனாலன்னு எங்களுக்கு சொல்ல தெரியா விட்டாலும், எங்களுக்கு எங்க இயேசப்பா முக்கியம் என்பதை மட்டும் அழகாக புரிஞ்சுகிட்டோம். இந்த ஒரு ஆசை எங்க அடி மனதில இருந்ததை, எங்களுக்கு எங்க இயேசப்பா வெளிப்படுத்தினதுக்காக அவருக்கு இந்த நேரத்தில கோடான கோடி நன்றிகள் செலுத்த விரும்புறோம். உண்மையில் இன்னொரு முறை உங்களுக்கு நன்றிகள் சொல்ல நாங்க விரும்புறோம்.

    நம்ம இயேசப்பா நமக்கு நிறைவான பாத்திரங்களை பற்றி அழகாக சொல்லி கொடுத்தாங்க. ஆனா குறைவான பாத்திரங்களாகிய நம்மை குறித்தும் என்றும் கரிசனை உள்ளவரா இருக்கிறார். குறைவான நமக்கு மட்டும்தான் கடிந்து கொள்ளுதலான்னு நம்ம மனது கேள்வி கேட்கலாம். சாரி குட்டிகளா, அது நிறைவான பாத்திரங்களுக்கும் பொருந்தும். ஏன்னா, இந்த உலகத்துல பிறந்த நாம எல்லாரும் பாவத்தால் பிறந்தவங்கன்னு தாவீது சங்கீதத்தில சொல்லி இருப்பார். நான் என் துர்குணத்தில் உருவானேன். என்னுடைய தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள்.ன்னு சொல்லி இருப்பார். அதுனால நாம நம்ம தேவனை மறக்கிற சந்தர்ப்பங்கள் அதிகம். அவருடைய வார்த்தையை கேட்காம போறதும் அதிகம். ஏன்னா நம்ம இயேசப்பா ஏற்கனவே நமக்கு சாத்தான் சோதித்த சமயம் வார்த்தைகளை வைத்து தான் சோதனை பண்ணினான். அதுனால நம்ம இயேசப்பா அங்க நமக்கு குறிப்பிட்ட மூன்று விதமான சோதனைகளும், நம்ம வாழ்க்கையிலையும் வரத்தான் செய்யும். ஆனா அதுல தேவனுடைய வார்த்தைகளை எப்படி நாம கண்டுப்பிடிச்சி தப்பித்து கொள்ளுகிறோம் என்பது தான் நாம சாத்தானை ஜெயிப்பதற்கான அடையாளம். அதுல நாம விழுந்து போனா அது நம்ம தேவனுக்கு முழு மன வேதனைதான். ஆனா அதற்காக நம்ம இயேசப்பா சீ…..இந்த பையன்/ பொண்ணு கீழே விழுந்துட்டா….இனி இந்த குதிரையால ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு நம்மளை ஒதுக்கி வைச்சிட்ட மாட்டார். கடைசி வரை….அதாவது, நாம இந்த பூவுலகத்தை விட்டு பிரியுற வரை நம்மளை திடப்படுத்தி பக்க பலமா இருந்து, அவர்கிட்ட வருவதற்கு உதவி செய்வார் குட்டிகளா. அதுனால நிறைவான பாத்திரங்கள் கூட இந்த சோதனையோ, வேதனையோ சந்திக்க நேரிடும். ஆனா சில நேரங்களில் விழுந்து போனாலும், மீண்டும் எழுந்திருப்பார்கள். ஏன்னா அவங்களுக்கு தெரியும், நம்ம இயேசப்பாதான் அவங்க பெலன். அதுனால மறுபடியும் அவங்க நம்ம இயேசப்பா கொடுத்த ஓட்டப்பந்தயத்தில ஓட ஆரம்பிச்சிருவாங்க.

    அவங்க பெலன் அவங்களுக்கு தெரியும், நம்ம இயேசப்பான்னு. நமக்கு தெரியுமா, நம்ம பெலன் யாருன்னு? தெரிந்து கொண்டா குற்ற மனசாட்சியோட இல்லை தேவையில்லாத மன வருத்தங்களோட, அவரை விட்டு விலகி ஓடாம, அவர் பக்கத்தில இருக்கிறதைதான் நாமும் தெரிந்து கொள்ளுவோம். அவர் விட்டு விலகி ஓட நினைக்க மாட்டோம். எப்பயும், எது வந்தாலும், அவருடைய கரங்களை பிடித்து கொள்ளுவதைதான் தெரிந்து கொள்ளுவோம். இதுதான் குட்டிகளா, நம்ம வாழ்கையின் இரகசியம். இந்த வாழ்கையின் ரகசியத்தை நாம முழுமையா புரிந்து கொண்டா என்னைக்கும் நம்ம வாழ்கையில் வேதனைகளை பார்த்து துவண்டு போக மாட்டோம்.

    சரி குட்டிகளா, நம்ம இயேசப்பா நம்மளை கடிந்து கொள்ளுறது கூட அவர் நம்ம மேல வைச்ச அன்பினால் மட்டுமே. அது எப்படின்னு அவர்கிட்டேயே கேட்டு தெரிந்து கொள்ளுவோமா?

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    × 1 = four

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>