• இயேசு கிறிஸ்து யார்?(22)

    சிலுவையில அறையுறேனா??

    jesus22

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம தேவனின் நாமம் உங்களை அழைத்தற்காகவும், அவர் உங்களை தேர்ந்தெடுத்தற்காகவும் நீங்க உங்க மனதில ரொம்பவே சந்தோசப்படுவீங்க, அப்படித்தான குட்டிகளா. நம்ம தேவனின் நாமம் எவ்வளவு உயர்ந்ததுன்னும், அதற்கு இணையா இந்த உலகத்தில வேற எந்த நாமங்களும் கிடையாதுன்னும் உங்களுக்கும் தெரியும். ஏன் நம்ம இயேசப்பா கூட சொல்லியிருக்காங்களே, என் நாமத்தினால் நீங்க பேய்களை துரத்துவீங்க, நவமான பாஷைகளை பேசுவீங்க, வியாதிகளை சொஸ்தமாக்குவீங்க……மாற்கு புத்தகத்தில அவர் பரமேறி போகறதுக்கு முன்னாடி தன்னுடைய சீஷர்கள்கிட்ட சொன்னாங்க.

    இந்த உலகத்தில எந்த நாமத்துக்கு(பெயர்) இப்படிப்பட்ட மகத்துவம் உண்டுன்னு உங்களால சொல்ல முடியுமா குட்டிகளா. அப்படி நீங்க கண்டுபிடிச்சீங்கன்னா எங்களுக்கு மறக்காம எழுதி அனுப்புங்க?

    நம்ம தேவனின் மகத்துவத்தை நீங்க தெரிந்து கொள்ள ஏற்கனவே நம்ம வேதாகமத்தை எடுத்து ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு நினைக்கிறோம். குட் குட்டிகளா, ஒரு விசயத்தை நீங்க நினைவில வைச்சுக்க நம்ம இயேசப்பா வலியுறுத்துறாங்க. அது என்னதுன்னா, நம்ம இயேசப்பாவை தெரிந்து நம்ம பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தது நல்ல காரியம். ஆனா அதை ஒரு ஆராய்ச்சி பண்ணுற நோக்கத்தில் வாசிக்காம, நம்மளை நேசிக்கிற நம்ம இயேசப்பாவை தெரிந்து கொள்ளனும்னு என்கிற நோக்கத்தில வாசிங்க, ப்ளீஸ்…..

    ஏன்னா, நம்ம இயேசப்பா ரொம்பவே நேசித்த தன்னுடைய பிள்ளைகளான இஸ்ரவேல் மக்கள் மத்தியில 33 ½ வருசங்கள் இருந்த பிறகும், அவர்தான் நம்ம தேவன் அனுப்பின ஒரே குமாரன்னு அவங்களால அடையாளம் தெரிந்து கொள்ள முடியலை குட்டிகளா. நீங்க ஆச்சர்யமா பார்க்கிறது புரியுது. தன்னுடைய பையனை தான் நேசித்த இஸ்ரவேல் மக்கள்கிட்ட நம்ம பிதாப்பா அனுப்பின பிறகும், அதற்கான தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின பிறகும், கடைசி வரைக்கும் அவங்க கண்கள் திறக்க படவே இல்லை. நம்ம இயேசப்பா தன் பிள்ளைகள் கிட்ட எத்தனையோ முறை அவர் தான் அவங்க தேவன் அனுப்பின மேசியான்னு சொன்ன பிறகும் கூட, வானத்தில இருந்து ஒரு அடையாளத்தை காண்பியும், அதற்கடுத்து யோசிப்போம்ன்னு சொல்லி நம்ம இயேசப்பாவை ஒமிட் பண்ணிட்டாங்க.

    உண்மையில் அது நம்ம தேவனுக்கு எத்தனை பெரிய வேதனையை கொடுத்திருக்கும் குட்டிகளா. மோசே மூலமா கொடுத்த நியாய பிரமாணங்களை நம்பின இஸ்ரவேல் மக்கள், அவங்களை ரட்சிக்க தேவன் தன்னுடைய பையனை அனுப்புவாங்கன்னு ரொம்பவே எதிர்பார்த்தவங்க, அவர் தன் கண் முன்னாடி நடமாடின நாட்களில் அவர்ல எத்தனை தப்புகள் கண்டுப்பிடிக்க முடியும்னு வகை தேடினாங்களே தவிர அவரை நம்ப கொஞ்சம் கூட நேரம் ஒதுக்கலை. உங்களுக்கும் மன வருத்தமா இருக்குதா??

    சப்போஸ் நீங்க நினைக்கலாம் குட்டிஸ். நம்ம இயேசப்பா மூலமா அற்புதங்களை பெற்றவங்க நம்பியிருக்கலாம். இருக்கலாம் குட்டிகளா, ஆனா அப்ப இருந்த யூதர்களுக்கு பயந்து கொண்டு யாரும் நம்ம இயேசப்பாவை பற்றி சொல்ல வராத அந்த சமயம் நம்ம இயேசப்பாக்கு எத்தனை வேதனையா இருந்திருக்கும் அது. தன்னுடைய பிள்ளைகள் தன்னை வாய் நிறைய அப்பான்னு கூப்பிட தான் தன்னுடைய எல்லா மகிமைகளையும் துறந்து நமக்காக இந்த உலகத்துக்கு வந்தாங்க. ஆனா அற்புதம் செய்த நிமிடம் மட்டும், நீங்க தேவனுடைய பையன்ன்னு சொல்ல முடிந்த அவங்களால் வாய் நிறைய அவரை கூப்பிடாம, உலகத்தில் இருக்கிறவங்களுக்கு பயந்து கொண்டு, ஏதாவது தனக்கு ஆபத்து வந்திருமோன்னு, மற்றவங்களை பார்த்த போது, நம்ம தேவனுக்கு என்ன ஒரு ,மன நொறுக்குதலா இருந்திருக்கும். உங்களாலயும் இதை  புரிந்து கொள்ள முடியும் குட்டிகளா? நாம நேசிக்கிறவங்க, நம்மளை ஒரு பொருட்டாகவே மதிக்காம நம்ம முன்னாடி அங்கும், இங்கும் நகர்ந்தா அது எத்தனை பெரிய மன வலியை கொடுக்கும்………………………………..

    நீங்க நினைக்கலாம், நம்ம இயேசப்பாவின் தீர்க்கதரிசனங்கள் அடங்கிய புத்தகங்களை வாசித்த பெரிய ஆசாரியர்கள் இருந்திருப்பாங்க. அவங்க நம்மை இயேசப்பாவை பற்றி புரிந்து வைச்சிருப்பாங்கன்னு. சாரி குட்டிகளா, நம்ம தேவனின் எல்லா நியாய பிரமாணங்களையும் தான் கைகொண்டதோட மட்டுமில்லாது இஸ்ரவேல் மக்களுக்கு சொல்லி கொடுத்த அவங்கதான் நம்ம இயேசப்பாவை சிலுவையில அறைய ரொம்பவே துடிச்சாங்கன்னு சொன்னாதான், சரி வரும்னு நம்ம இயேசப்பா நினைக்கிறாங்க. மோசே காலத்தில ஆரோனை ஆசாரிய பதவிக்கு நம்ம தேவன் உயர்த்தி வைத்ததோட, தன்னுடைய பிள்ளைகளுக்கு தன் வார்த்தைகளை தவறாம சொல்லி கொடுக்கணும்னு அவங்களுக்கு கட்டளை கொடுத்தாருன்னு உங்களுக்கும் தெரியும். ஆனா நம்ம தேவனுடைய பையனையே கொல்ல இஸ்ரவேல் மக்களை அந்த ஆசாரியர்கள் எழுப்பி விட்ட போது நம்ம இயேசப்பா எந்த அளவுக்கு துடிச்சி போயிருப்பார்.

    சரி, அவங்க போனா போகட்டும், அவர் பின்னாடியே நம்ம தேவ வார்த்தைகளை கேட்க ஒரு மக்கள் கூட்டம் அலைந்தாங்களே, அவங்க கண்டிப்பா நம்ம இயேசப்பாவை நேசித்திருப்பாங்கன்னு நாங்க நம்புறோம்ன்னு நீங்க நினைக்கலாம். நம்ம இயேசப்பா பின்னாடி அலைந்த மக்கள் கூட்டத்தை அவர் ஒரு நொடி கூட நம்பலைன்னு யோவான் புத்தகத்தில அழகாக அவர் சொல்லியிருப்பார். நீங்க இதை ரொம்பவே வியப்பா நினைச்சாலும் இதுதான் உண்மை குட்டிகளா. ஆதி முதல் மனிதனுடைய நினைவுகளை நம்ம இயேசப்பா தெரிந்து வைச்சிருந்ததால யாரோடும் இணங்க வில்லை. ஏன்?ன்னு உங்க மனது கேள்வி கேட்டா, தன் பின்னாடி அலைகிற மக்கள் கூட்டம் தன்னை உண்மையில் நேசிக்க இல்லை, அற்புதங்களை தன் வாழ்கையில் பெற்றுக் கொள்ளவும், கஷ்டப்படாம சாப்பாடை பெறவும், தன்னை இந்த யூத மக்களுக்கு ராஜாவாக்கிடவும் அலையுதுன்னு தெரிந்திருந்த நம்ம இயேசப்பாக்கு  அந்த காரியம் எந்த அளவுக்கு மன வேதனையை தந்திருக்கும்னு உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்.

    ஒரு உண்மையான தேவ ஊழியர்கிட்ட இந்த மன வேதனையை பற்றி கேட்டா அவர் உங்களுக்கு சொல்லுவார். தன்னுடைய படிப்பு, குடும்பம், ஆசை, விருப்பங்களை துறந்திட்டு நம்ம இயேசப்பாவின் அழைப்பை ஏற்ற ஒரு ஊழியர், ஒரு பகுதியில ரொம்பவே வல்லமையா ஊழியம் பண்ணிட்டு இருந்தார். அவர் இருந்த இடத்தில நம்ம தேவ பலம் இறங்கிதனால நிறைய பேரு வல்லமையா அற்புதங்கள் அடைந்தாங்க. அந்த ஊழியரின் கடைசி நிமிசங்கள் சமீபமா ஆச்சு. அப்ப, தன்னுடைய ஆவிக்குரிய பிள்ளைகளா அவர் நினைச்ச மக்களை கூப்பிட்டு, தனக்கு இயேசப்பாவை பற்றி அவங்க தெரிந்து கொண்ட காரியங்களை சொல்ல சொன்னாராம். ஒருத்தர் கூட நம்ம இயேசப்பாவை இருதயத்தில பெறாம, வெறும் மந்திர சொல்லாத்தான் நம்ம இயேசப்பாவின் பெயரை தெரிந்து வைச்சிருகிறதை கேட்டதும், ரொம்பவே துடிச்சி போயிட்டாராம். தன் வாழ்கையில தன் தேவன் அழைத்த அழைப்பில உண்மையா இருக்காம போறோமேன்னு மன வேதனையில தான் கடைசியில அவர் இறந்து போனார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இப்ப  உங்களால் புரிஞ்சுக்க முடியுதா?????

    கடைசியா யாரை குறித்து நீங்க நம்பிக்கை வைச்சிருக்கீங்கன்னு நாங்க சொல்லட்டுமா? நம்ம இயேசப்பாவுடைய சீஷர்கள் சரியா? சாரி குட்டிஸ்?  அவங்களை குறித்தும், நம்ம இயேசப்பா சொல்லுறதை தெரிந்து கொள்ளுங்க. நம்ம இயேசப்பா தன்னுடைய ஊழியத்தை இந்த பூமியில ஆரம்பிச்ச பிறகு 12 பேரை தன்னுடைய சீசர்களா தெரிந்து கொண்டாங்க. அதுல இருந்த யூதாஸ்காரியோத்து உங்களுக்கு தெரிந்த நபர்தான், அவன் நம்ம இயேசப்பாவை காட்டிக் கொடுத்தவன். இது நம்ம இயேசப்பாக்கு 3 ½ வருசமும் தெரிந்திருந்தும், அந்த பாடுகளை எப்படி  சகிச்சிருப்பார்ன்னு புரியுதா? ஒவ்வொரு முறையும், இந்த நொடியில என் மேல அன்பு கூர்ந்திர மாட்டானோ, இப்பவாது பரலோகத்தை தெரிந்து கொள்ள மாட்டானோன்னு அவன் முகத்தை நம்ம இயேசப்பா எத்தனை முறை  பார்த்திருப்பார். ஆனா ஒவ்வொரு முறையும் அதுல ஏமாற்றத்தை கண்டதும், எத்தனை தடவை நம்ம இயேசப்பா மனம் நொறுங்கி போயிருக்கும்?

    யூதாஸ்காரியோத்தை பற்றி ஏன் பேசுறீங்க? அவருடைய உண்மையான சீஷனான யோவான் இருக்காரே? அவர்தான் நம்ம இயேசப்பா பின்னால, ஏன் சிலுவையில இறந்து போகுற நேரம் கூட பக்கத்தில தான் இருந்தார். நீங்க இதுல பொய் சொல்ல முடியாது? நாங்க passion of the christ படம் பார்த்தோம்ன்னு நீங்க சொன்னா சாரி குட்டிஸ், அவர் நம்ம இயேசப்பா சிலுவை பாடுகள் நேரம் பக்கத்தில இருந்தது உண்மைதான். அதற்கும் மேல நம்ம இயேசப்பாவுடைய தாயாகிய மரியாளை தன்னுடைய அம்மாவா ஏற்றுக் கொண்டது உண்மைதான். இதற்கு மேல என்ன ஆதராங்கள் உங்களுக்கு வேணும், அவர் நம்ம இயேசப்பா மேல அன்பா இருந்தாருன்னு சொல்ல?????

    உங்க கேள்விக்கான பதில் நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு பார்ப்போமா? மகதலேனா மரியாள் நம்ம இயேசப்பாவின் சரீரத்தை காணலைன்னு சொன்னப்ப அவருடைய சீஷர்களில் இரண்டு பேரும் ஓடி வந்து கல்லறையில பார்த்ததா யோவான் புத்தகத்தில சொல்லபட்டிருக்கு.  ஒருத்தர் பேதுருன்னு உங்களுக்கு தெரியும். இன்னொருத்தர் நம்ம இயேசப்பாக்கு அன்பாய் இருந்த யோவான்தான். என்ன குட்டிகளா, இதுல என்ன தப்பிருக்கு?ன்னு நீங்க கேட்டா, நம்ம இயேசப்பா உயிரோட இருந்தப்பவே, தான் சிலுவையில பாடுகள் அனுபவிக்க போறதையும், மூன்றாம் நாள் உயிரோட திரும்பவும் வரப் போறதையும் தன்னுடைய சீசர்களுக்கு சொல்லி இருந்தார்.

    ஆனா அவர் சிலுவையில பாடுகள் பட்டு இறந்து போன அந்த நிலமையில் கூட, அவருடைய சீசர்களால் தன்னுடைய மேய்ப்பர் உயிரோட வருவாருன்னு நம்ப முடியலை. அது மட்டுமில்ல மற்றவங்கனாச்சும் யூதர்களுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே மறைந்து இருந்தா, யோவானும், பேதுருவும் கல்லறையில போய் செக் பண்ணவும் செய்தாங்க. தன்னுடைய இயேசப்பாவை காணும்னு அன்பின் மிகுதியால அவங்க ஓடியிருந்தாலும், நம்ம இயேசப்பாவின் வார்த்தைகளை நம்பாம ஓடினப்ப, அந்த நேரத்தில கூட நம்ம இயேசப்பாக்கு எத்தனை பெரிய துயரத்தை கொடுத்திருக்கும், யோவானின் செய்கை.

    ஏன்னா மற்ற சீசர்களை விட நம்ம இயேசப்பாக்கு ரொம்பவே நெருக்காம இருந்தவர் யோவான்தான். ஆனா அவர் மார்பில சாய்ந்து அவர் வார்த்தையை ரொம்ப பக்கத்தில கேட்ட அவரே  தன்னுடைய எஜமானின் வார்த்தைகளை நம்ப மறுத்து, நம்ம இயேசப்பாவின் சடலத்தை தேடி ஓடிட்டு இருந்த சமயம், ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பார். அது மட்டுமில்ல, நம்ம இயேசப்பா முதன்முதல்ல மரியாளுக்கு காட்சி அளித்ததை அவங்க, அவருடைய சீஷர்கள்கிட்ட சொன்ன பிறகும் கூட அவருடைய சீஷர்கள் அதை நம்பலை. அன்று சாயங்காலம் தன் சீஷர்கள் முன்னால நம்ம இயேசப்பா வந்து நின்ன பிறகுதான் நம்பினாங்க. அந்த சீசர்கள் கூட்டத்தில தான் யோவானும் இருந்தார். இப்ப சொல்லுங்க குட்டிகளா, தன்னுடைய சீஷர்கள் கூட தன்னை நம்ப மறுத்தப்ப, நம்ம இயேசப்பாக்கு அது எவ்வளவு பெரிய துயரத்தை கொடுத்துருக்கும்னு நாங்க சொல்லுறதுக்கு முன்னாடியே நீங்க புரிஞ்சிருப்பீங்க.

    நம்ம இயேசப்பாவின் சீசர்களை பற்றி குறை சொல்லறதுக்காக இதை அவர் சொல்லலை குட்டிகளா. தன்னுடைய அன்புக்கும், நம்பிக்கையும் உரியவர்களே தன் வார்த்தையை நம்ப மறுத்த போது தான் எந்த அளவுக்கு வேதனைப்பட்டேன்னு உங்களுக்கு உணர்த்ததான் இதை சொன்னாங்க. இப்ப சொல்லுங்க குட்டிஸ், நம்ம இயேசப்பா இந்த உலகத்திற்கு தன்னுடைய பிள்ளைகளை கை விரிச்சி ஏற்றுக் கொள்ள வந்த சமயம், ஒருத்தர் கூட அவரை புரிஞ்சுக்கலை. அது மட்டுமில்ல, அவரை ஏற்றுக் கொள்ளவும் தயங்கினாங்க. ஆனா அவர் தன் பிள்ளைகள் மேல வைச்சிருந்த அன்பு மட்டும், இன்னும் கூட குறையலை குட்டிகளா.

    சப்போஸ் நீங்க நினைக்கலாம், நம்ம இயேசப்பா ஏன் போயும், போயும், அந்த இஸ்ரவேல் மக்கள் மத்தியில் பிறந்தாங்க. அவரை குறித்து ஒருத்தர் கூட புரிந்து கொள்ள வில்லையே. அவர் எங்க இந்தியா நாட்ல பிறந்திருந்தா நாங்க, எப்படி அழகாக ஏற்றுக் கொண்டிருப்போம்?ன்னு யோசிக்கலாம். சாரி குட்டிஸ், அவர் நமக்காக பிறந்தார், இப்பவும் நம்மளை நேசிக்கிறார், நாம அவர் கூட பேச மாட்டோமான்னு கண்ணீர் வழிய காத்திட்டு இருக்கிறார்ன்னு தெரிந்து கொண்ட பிறகும் எனக்கு இப்போதைக்கு நேரம் இல்லை இயேசப்பா, இன்னொரு நாள் பார்ப்போமே? உங்க கூட நிதானமா உட்கார்ந்து பேசுறேன்?ன்னு ஓடிட்டு இருக்கிற நாம மட்டும் எந்த வகையில தகுதியான ஆட்கள்??????

    அந்த யூதர்கள்னாச்சும் ,அவர் அன்பை புரிந்து கொள்ளாம ஒரு முறைதான் அவரை சிலுவையில அறைந்தாங்க. ஆனா நம்ம இயேசப்பாவை மறந்திட்டு, மறுத்திட்டு தினமும் ஓடுறோமே, எத்தனை முறை தினமும் அவரை சிலுவையில அறையுறோம்னு இன்னைக்காவது யோசிக்கலாமே?????????????    

    “  பேசும் தெய்வம் நீர்

      பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல

      பேசும் தெய்வம் நீர்

                                  

      என்னை படைத்தவர் நீர்

      என்னை வளர்த்தவர் நீர்                        (2)

      என் பாவம் நீக்கி என்னை குணமாக்கி

      என்னோடிருப்பவர் நீர்                          (2)

      இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே     (2)

     

        பேசும் தெய்வம் நீர்

      பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல

      பேசும் தெய்வம் நீர்

     

      என் பாரம் சுமப்பவர் நீர்

      என் தாகம் தீர்ப்பவர் நீர்                        (2)

      என்னை போஷித்து என்னை உடுத்தி  

      என்னோடிருப்பவர் நீர்                          (2)

      இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே     (2)

     

      பேசும் தெய்வம் நீர்

      பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல

      பேசும் தெய்வம் நீர்”

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − 6 = zero

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>