• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 6

    சொல்லு குட்டிமா, இப்ப எத்தனை நாள் ஆச்சு?

    நம்ம பைபிள்ல சொல்லப்பட்டிருக்கு ஏஞ்சல். சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.

    நம்ம தேவன் வானத்தை உருவாக்கின அதிசயத்தை உன்னுடைய கண்கள் நேரடியா இப்ப பார்த்திருக்கு. நீ என்ன நினைக்கிற?

    என் தேவன் எனக்கு காண்பித்த கிருபைக்காக நான் என்றும் நன்றிகள் சொல்லிட்டே இருப்பேன். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா ஏஞ்சல். டிவில டிஸ்கவரி சேனல்ல சொல்லும் போது, பூமி இந்த வகையில உருவாகியிருக்கலாம். அடுத்து சூரியனும், மற்ற நட்சத்திரங்களும் இந்த மாதிரி சில வினைகள் மூலமா உருவாகியிருக்கலாம்ன்னு நிறைய சொல்லுவாங்க. அப்பெல்லாம் எனக்கு மனசுல தோணும். நாம பைபிள் வாசிக்கும் போது, இந்த உலகத்தையும், அதில இருக்கிற எல்லாவற்றையும் நம்ம தேவன் தன்னுடைய வார்த்தையால படைத்தாங்கன்னு சொல்லி இருக்கு. ஆனா இந்த மாதிரி டிஸ்கவரி சேனல் மற்றும் அறிவியல் அதுவும் அஸ்ட்ரோ சம்பந்தமான ஆராய்ச்சியாளர்களும் பூமியோ இல்லை இந்த உலகத்தில இருக்கிற பொருட்களோ சில வினைகள் மூலமா தான் உருவாகி இருக்கும்னு சொல்லுறாங்களேன்னு யோசித்து கொள்ளுவேன்

    அதுனால நீயும் அதை உண்மைன்னு நம்பி இருக்கியா குட்டிமா?

    இல்லை ஏஞ்சல். நம்பலைன்னாலும் சில சந்தேகங்கள் இருந்தது. ஆனா இன்னைக்கி நான் முழுமையா நம்புறேன். என் தேவனுடைய வார்த்தைகள்…..வல்லமையுள்ள வார்த்தைகள்தான் இதை செய்ததுன்னு.

    வெரி குட் குட்டிமா. உனக்கு நம்ம பவுல் ஒரு உண்மையை பைபிள்ல சொல்லி இருக்கிறதை இப்ப ஞாபகப் படுத்த ஆசைபடுகிறேன். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும் , இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

    அப்ப இந்த உண்மை தேவனை நம்பியிருக்கிற அவருடைய பிள்ளைகளுக்கு மட்டும்தான் தெரியுமா ஏஞ்சல்.

    ஆமா. மற்றவங்க அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுற கணக்கின்படி வெளிபடுத்தின கட்டுகதைகளைதான் நம்புறவங்களா இருப்பாங்க.

    அப்ப உண்மையில் நான் ரொம்பவே கிருபை பெற்றவ. ஏன்னா எல்லா தேவ பிள்ளைகளும் இன்னும் தன்னுடைய விசுவாசத்தினால என்னுடைய தேவன் உருவாக்கின இந்த உலகத்தை ரசித்திட்டு இருக்கும் போது, நான் மட்டும் அதை பார்க்கிற கிருபையையும் பெற்றேனே. தேங்க்ஸ் lord.

    உனக்கு இந்த சத்தியங்கள் வெளிபடுத்தப்பட்டது, நம்ம தேவனில் விசுவாசமாய் இருக்கிற அவருடைய நீதிமான்களுக்காக இல்லை. இன்னும் பைபிள் வாசிக்கும் போது, நான் ஆவியானவரை ஏன் கூப்பிடனும். அவர் வந்தா உடனே இந்த பைபிள்ல இருக்கிற மறைபொருட்களை சொல்லி கொடுத்துருவாரோன்னு எள்ளி நகையாடிட்டு இருக்கிற தன்னுடைய பிள்ளைகளுக்குதான் இந்த உண்மைகளை உன் மூலமா வெளிப்படுத்த ஆசைபடுறாங்க

    ரொம்பவே உற்சாகத்துடன்…..ஏஞ்சல் இங்க பாருங்க. நம்ம தேவன் சொன்னவுடன் என் கால் கீழ் இருந்த தண்ணீர் எல்லாம் ஏதோ ஒரு இடத்தை நோக்கி ஓடுது. அது மட்டுமில்ல அப்ப தண்ணீர் இருந்த இடத்தில வெறும் தரை மட்டும் காணப்படுது.

    இதுக்கு நம்ம தேவன் என்ன பேரு வைத்தாங்கன்னு யோசித்து சொல்ல முடியுமா?

    கண்டிப்பா ஏஞ்சல். அங்க கொஞ்சம் தூரத்தில இருக்கிறதை பாருங்க.

    எதை சொல்லுற குட்டிமா. என் கண்ணுக்கு எட்டின தூரம் வரை தண்ணீர் மட்டும்தான தெரியுது.

    ஆமா. தண்ணீர் எல்லாம் சேர்ந்து இருக்கிற இடத்திற்கு நம்ம தேவன் சமுத்திரம்ன்னு பேரு வைச்சாங்க. நாம இப்ப கடல் அடுத்து உவரி அடுத்து ஆழி இன்னும் சில இடங்களில் பெருங்கடல்கள்ன்னு கூட பேரு வைச்சு சந்தோசப்படுறோம். ஆனா ஒரே ஒரு கஷ்டம் ஏஞ்சல்.

    என்னது?

    நம்ம தேவன் தன்னுடைய வல்லமையுள்ள வார்த்தையால எவ்வளவு ஈஸியா கடலையும் வெறும் தரையும் அதாவது பூமின்னு நம்ம தேவன் அழைத்ததையும் உருவாக்கிட்டிருக்காங்க.

    நல்ல விசயம்தான. இதில உனக்கு என்ன கஷ்டமா இருக்கு.

    ஆனா உங்களுக்கு தெரியுமா ஏஞ்சல்? எங்களுக்கு இந்த உலகத்தில எத்தனை சமுத்திரங்கள் இருக்குன்னு அழகாக சொல்லி கொடுத்துட்டு ஒகே ஸ்டுடென்ட்ஸ் நாளைக்கே எல்லாத்தையும் படிச்சிட்டு வந்திருக்கணும். இல்லைன்னா திரும்பவும் பனிஷ்மென்ட்டா வீட்டுல எழுத வேண்டி இருக்கும்ன்னு டீச்சர் சொல்லும் போது, கஷ்டமா இருக்காதா?

    சிரித்தவர்……..தேவன் உருவாக்கின அதிசயங்களை படிக்கிற நீங்க உண்மையில் பாக்கியவான்கள். நம்ம தேவன் இத்தனையும் அழகாக ரொம்பவே நேர்த்தியாய் படைத்தது, எனக்கு எவ்வளவு வல்லமை இருக்குன்னு மற்றவங்ககிட்ட சொல்லி பெருமை அடிக்க இல்லை குட்டிமா. முழுக்க முழுக்க உங்க மேல தான் வைத்த அன்பினால்தான், உங்களை சந்தோசப்படுத்தி பார்க்குறதுக்காகதான் எல்லாத்தையும் படைத்தார்.

    நீங்க சொல்லுறது உண்மை ஏஞ்சல். ஏன்னா பைபிள்ல யோவான் புத்தகத்தில எங்க தேவன் எங்க மேல வைத்த முழுமையான அன்பினால்தான் அவருடைய ஒரே பையனான இயேசப்பாவையே இந்த உலகத்தில எங்களுக்காக பாடுகள்பட ஒப்புக்கொடுத்தார். உண்மையில் நீங்க சொன்ன மாதிரி நாங்க பாக்கியவான்கள்தான்.

    நம்ம தேவன் கடலை அதன் இடத்தில நிறுத்தி வைச்ச பிறகு, அந்த தண்ணீர் அங்கயே நிற்கறதக்கு, கடலுக்கு எல்லையா கதவுகளையும், தாழ்பாள்களையும் போட்டதையும், அதை எப்படி போட்டாங்க என்பதை பத்தியும் யோபு புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கு. அதுமட்டுமில்ல குட்டிமா, நம்ம தேவன் உருவாக்கின எல்லா நீர்நிலைகளையும் அவர் எப்படி தன்னுடைய ஆளுகையால் மனிதர்களுக்கும், மற்ற சுவாசமுள்ள அனைத்து உயிரிகளுக்கும் தண்ணீர் அதன் மூலமா கொண்டு செல்லுறார்ன்னு சங்கீத புத்தகத்தில் தெளிவா சொல்லப்பட்டிருக்கு. எல்லாவற்றையும் பைபிள் வாசித்து பார்த்து தெரிந்து கொள்ளு.

    ஏஞ்சல் கண்டிப்பா நாளைக்கி இதுல நீங்க  எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லிருவேன். ஆனா இவை அனைத்தையும் என் தேவன் எனக்கு காண்பிப்பாரா ஏஞ்சல்.

    நீயே நம்ம தேவன்கிட்ட கேட்டு பாரு குட்டிமா. நம்ம தேவன் சித்தம் என்னன்னு தெரிந்து கொள்ளலாம். அப்ப நாம நம்ம தேவனுக்கு நன்றிகள் செலுத்திட்டு அவருடைய வேலையை செய்ய போகலாமா?

    கண்டிப்பா ஏஞ்சல். அன்புக்குரிய தகப்பனே, இன்று நீங்க வெளிப்படுத்தின எல்லா சத்தியங்களுக்காக உமக்கு கோடான கோடி நன்றிகளை செலுத்துறோம். துதி, கனம், மகிமை யாவையும் என் தேவனாகிய கர்த்தருக்கே செலுத்துகிறேன், ஆமென்.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    1 + eight =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>