• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 23

    படுக்கையில் படுத்த பிறகும் அவளுக்கு தூக்கம் மட்டும் வர வில்லை. அம்மாவும் அப்பாவும் இன்னும் ஜெப அறையில் ஜெபித்து கொண்டிருப்பது அவளுக்கும் தெளிவாக தெரிந்தது. எப்பவும் அவள் தூங்கும் நேரம்தான். ஆனால் இன்று மட்டும் கண்களில் தூக்கம் சிறிது கூட இல்லை.

    கண்களை மூடினாலே அந்த பெரிய பாம்பு வந்து போனது. நடுவில் குளோரி அக்காவுக்கு என்ன ஆச்சு என்கிற எண்ணம் வேற. அந்த அக்காவும் அவங்க அம்மா, அப்பா கூட சேர்ந்திருப்பாங்களா!!!!! உண்மையில் இத்தனை எண்ணங்கள் மத்தியில் அவள் தூக்கம் தொலைந்து போனது.

    பேசாம அம்மா, அப்பா கூட நாமளும் ஜெபத்தில கலந்து கொள்ளலாமா என்ற எண்ணம் கூட வந்து போனது. இல்லை, வேண்டாம். தூக்கம் எனக்கு வரலைன்னு தெரிந்தாலே அவங்க மனசு கஷ்டப்படும். நான் எதையோ போட்டு மனதில குழப்பிட்டு இருக்கேன்னு அவங்க ஈஸியா கண்டுபிடிச்சிருவாங்க. அப்ப என்ன செய்ய….. தீவிரமாக யோசித்தவளுக்கு கடைசியில் வந்தது அவளுடைய சண்டே ஸ்கூல்ல கொடுத்த பரிசு புத்தகம். மனன வசனங்களை வேகமா சொன்னதற்காக கொடுத்த புத்தகம்.

    ஆனா லைட் போடாம வாசிக்க முடியாதே. யோசித்தவள் பரவாயில்லை….. அம்மாவும் அப்பாவும் நான் இயேசப்பா புத்தகத்தை தான் படிக்கிறேன்ன்னு நினைச்சி ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.

    புக்கை அவளுடைய கப்போர்ட்டில் இருந்து எடுத்தாள். சின்ன புத்தகம்தான். ஆனா தேவனுடைய அன்பில் விசுவாசம் வைப்பது எப்படி என்பதை குறித்து சொல்லப்பட்ட புத்தகம். இது வரை மறந்தும் அதை எடுத்து பார்க்க வில்லை. ஏன் என்று யோசித்து பார்த்தவளுக்கு பாவம் பதில் மட்டும் கிடைக்க வில்லை.

    முதல் பக்கம் பார்க்கவே அழகாக இருந்தது. ஒரு சின்ன குழந்தை தவழ்வது போல ஒரு படம். ரொம்பவே கியூட்டாக இருந்தது. நான் கூட இந்த உலகத்தில் பிறந்தப்ப இதே மாதிரி சின்ன குழந்தையாகத்தான இருந்திருப்பேன். அதற்குள்ள எத்தனை பெரிய பிள்ளையா ஆயிட்டேன். இன்னும் கொஞ்சம்னா அப்பா தோள்ளை நான் தொட்டிருவேன். மனதிற்குள் சிரித்து கொண்டாள்.

    அடுத்த பக்கத்தை திருப்பினாள். கொஞ்சம் பெரிய குழந்தை, ஒரு வயதில் நடக்க ஆரம்பித்த பிறகு எடுத்த படம் போல தோன்றியது. என்ன படமா போட்டிருக்காங்க. சப்போஸ் எழுதின ஆசிரியருடைய படமா….. இல்லை எதற்காக….. குழப்பி கொண்டாள். அடுத்த பக்கமும் படம்தான். உண்மையில் குழம்பி போனாள். இது இன்னும் கொஞ்சம் பெரிய பிள்ளையான போது எடுத்த படம். 5 வயது என்று சொல்லத்தக்கதாய் இருந்தது. இரண்டு பக்கமும் முடியை ரப்பர்பேண்ட்டால் மாட்டியிருந்தனர். என்னடா இது, அப்ப புத்தகம் முழுக்க முழுக்க படங்களா. ஒரு வார்த்தை கூட சொல்லலை. ஆனா இந்த குழந்தையுடைய முகம் கொஞ்சம் என் முகம் மாதிரி இருக்கு. ஓகே….. நாமளும் சின்ன பிள்ளையா இருக்கும் போது அழகாக இருந்திருக்கோம். சிரித்தாள்.

    அடுத்த படத்தை திருப்பி பார்த்தாள். இப்போது எப்படி இருக்கிறாளோ அதே மாதிரி உள்ள படம். உண்மையில் சண்டே ஸ்கூல்ல கொடுத்த புத்தகம்தான. இல்லை அம்மா, அப்பா என் போட்டோவை வைத்திருத்த புத்தகத்தை தவறி எடுத்திட்டேனா….. குழப்பத்தோடு அடுத்த பக்கத்தை பார்த்தாள். நரகத்தில் அவள் எரிந்து கொண்டிருந்த மாதிரி உள்ள படம். உண்மையில் வியர்த்து போனாள். இது என்ன புத்தகம்….. என்னுடைய வாழ்கையில் நடந்த எல்லா காரியத்தையும் காண்பிக்குதே!!!!

    ஒரு நிமிடம் புத்தகத்தை மூடி வைத்து விட்டு, சுற்றிலும் பார்த்தாள். அம்மா, அப்பா குரல் தெரிய வில்லை. அவள் அமர்ந்த இடம்தான். ஆனா அம்மா, அப்பா எங்க போனாங்க….. குழப்பத்தோடு வெளியே வந்து பார்த்தாள். உண்மையில் அவளால் நம்ப முடிய வில்லை. வானத்தில் அவள் பார்த்த நட்சத்திர கூட்டம், இப்போது அவள் கண்கள் முன்பு பிரகாசித்து கொண்டிருந்தது. என்ன இப்படி இருக்கு….. நான் உட்கார்ந்திருந்த ரூம்….. பின் திரும்பி பார்த்தவள் அதுவும் மறைந்து போயிருந்ததை புரிந்து கொண்டாள்.

    அவள் ஆச்சர்யப்பட்டு கொண்டிருக்கும் போதே அவளோடு என்றும் பேசும் ஏஞ்சல் வந்து நின்றார். ஹலோ குட்டிமா, எப்படி இருக்க…… முழுமையான சந்தோசத்தோடு அவர் வந்து கேட்கவும், அவளுக்கும் சந்தோசத்தை அடக்க முடிய வில்லை.

    ஏஞ்சல் நீங்களா…… பார்த்தே ரொம்ப நாள் ஆனது மாதிரி இருக்கு….. தேங்க்ஸ் lord …… மூச்சை முழுமையாக விட்டாள் அவள்.

    எப்படி இருந்துச்சு….. நரகம்…… சிறிது குரலை தாழ்த்தியே கேட்டார்.

    அது வந்து ஏஞ்சல்……. ம்….. நல்லா இருந்துச்சு…… குரலில் இருந்த சந்தோசம் குறைந்திருந்தது.

    அங்க போன பிறகுதான் இந்த பூமி எந்த அளவுக்கு அற்புதமானதுன்னு தெரிந்து கொள்ள முடிந்தது ஏஞ்சல். அது மட்டுமில்ல எங்க இயேசப்பா என்னை எவ்வளவு நேசிக்கிறாங்க என்பதையும் புரிந்து கொள்ள முடிஞ்சுச்சு ……… சிறிது நேரம் அமைதியானாள்.

    நான் என்னுடைய இயேசப்பாவை ரொம்பவே கஷ்டப்படுத்தியும் கூட இப்பவும் என்னை நேசிக்கிறாங்க என்பது எத்தனை சந்தோஷமான விஷயமா இருக்கு தெரியுமா ஏஞ்சல்…… ஒரு பெரிய கண்டத்தை தாண்டினது போல தோணுது…….. பேசும் அவள் முகத்தை பார்த்து கொண்டே இருந்தார் ஏஞ்சல்.

    ஏன் ஏஞ்சல் என் முகத்தையே பார்த்திட்டு இருக்கீங்க….. சங்கடமாய் உணர்ந்தாள் அவள். நான் எதுவும் திரும்பியும் என் இயேசப்பாவை கஷ்டப்படுத்திட்டேனா….. மனதுக்குள் கலங்கி போனாள்.

    ப்ளீஸ் குட்டிமா. எதையும் போட்டு மனசை குழப்பிக்காத. நான் உன்கிட்ட ஒரு காரியத்தை கேட்கணும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா திரும்பியும் அது உன் மனதை கஷ்டப்படுத்திருமோங்கிற எண்ணம்….. அதுனாலதான்…… சொல்லி விட்டு தயங்கி நின்றார்.

    சொல்லுங்க ஏஞ்சல். என்னுடைய இயேசப்பா அன்பை ருசித்த பிறகு, அவர் என்னுடைய தப்புக்காக பட்ட வேதனையை தெரிந்து கொண்ட பிறகு இப்பெல்லாம் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கை வந்திருச்சு ஏஞ்சல். என்னுடைய இயேசப்பா எனக்காக என்ன செய்தாலும் அது நல்லதா மட்டுமே இருக்கும்னு. அந்த காரியம் சப்போஸ் எனக்கு நல்லதாகவோ இல்லை கெட்டதாகவோ நான் நினைத்தாலும் கூட……. சொல்லி விட்டு சிரித்தாள்.

    உங்களுக்கு தெரியுமா ஏஞ்சல். முன்பெல்லாம் அம்மா நரகத்தை பற்றி சொல்லும் போதெல்லாம் அச்சோ….. அம்மா பேசியே அறுக்க ஆரம்பிக்கிறாங்களேன்னு யோசித்தது உண்டு. ஆனா அந்த போர் அடிக்கிற பாடம் வழியாபோயிட்டு வந்த பிறகு அது எனக்கு கொஞ்சம் பிடித்தமான பாடம் சொன்னா கூட சரி வரும்னு நினைக்கிறேன். நரகம் உண்டு என்பது மட்டுமில்ல அந்த நரகத்தில் மக்களுக்கு கிடைக்கிற தண்டனைகள் கூட ரொம்பவே கதி கலங்க வைக்கிற விசயமா இருக்குது. ஏன் ஏஞ்சல்….. இந்த நரகத்தை என்னுடைய இயேசப்பா படைக்கணும் …… அதுல தான் நேசிக்கிற பிள்ளைகள் தானே விரும்பி விழுற சமயம் வேதனைபடணும்…… இப்பவும் என்னுடைய இயேசப்பா என்னுடைய தப்புக்காக வேதனை அனுபவித்த அந்த நிமிஷங்களை என்னால மறக்க முடியாது ஏஞ்சல். ரொம்பவே வேதனையா இருந்துச்சு…… நான் நரகத்தில் பட்ட கஷ்டத்தை விட இது ரொம்பவே மோசமானதா இருந்துச்சு……

    ஆதங்கத்தோடு கேட்டு கொண்டிருந்தவளை பார்த்து சிரித்தவர் உன்னுடைய இந்த கேள்விக்கு கண்டிப்பா பதில் சொல்லுறேன். ஆனா இப்ப இல்லை, பிறகு….. அதுக்கு முன்னாடி உன்கிட்ட கேட்க நினைத்த காரியத்தை கேட்கலாமா?????

    சொல்லுங்க ஏஞ்சல்……. எனக்கு தெரிந்து விசயமா இருந்தா கண்டிப்பா சொல்லுறேன்…... அவளும் ஏஞ்சல் முகத்தை பார்க்க ஆரம்பித்தாள்.

    உன்னுடைய தேவன் ஒவ்வொரு பாடுகள் வழியா கூட்டிட்டு போகும் போதும் ஒரு பாடம் சொல்லி கொடுப்பார் என்பது உனக்கு தெரிந்த விசயம்தான். நேற்று நடந்த காரியம் மூலமா உன்னுடைய இயேசப்பா உனக்கு என்ன சொல்லி கொடுத்தாங்க குட்டிமா…… கேள்வியை கேட்டு விட்டு மீண்டும் ஆர்வமாக அவள் முகத்தை பார்த்தார்.

    நிறைய காரியங்கள் என்னுடைய இயேசப்பா சொல்லி கொடுத்தாங்க ஏஞ்சல். முதலில் கண் காண்கிற என்னுடைய பக்கத்தில உள்ளவங்களையும் நான் நேசிக்க கத்துக்கணும்னு சொல்லி கொடுத்தாங்க….. ரேஷ்மி விசயம் மூலமா

    அடுத்து வாய் வார்த்தைகளில் கவனம் தேவைங்கிற முக்கியமான பாடத்தை சொல்லி கொடுத்தாங்க….. அதுவும் ஏஞ்சல், அந்த பெரிய பாம்பு என் வாய் வழியா போய் வந்ததை நான் உணர்ந்தப்பவே நான் புரிந்து கொண்டேன்….. மனசில எந்த ஒரு மனிதாபிமானமும் இல்லாம மற்றவங்களை பேசினா இந்த கஷ்டத்தை யாராய் இருந்தாலும் நரகத்தில் பட வேண்டியது இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன்…..

    அடுத்து ரொம்ப அதுவும் என்னை பாதித்த காரியம் சாலொமோன் விசயம்தான் ஏஞ்சல்….. ஒரு மனிதன் இந்த உலகத்தில வாழும் போது எந்த அளவுக்கு மற்றவங்க புகழுற அளவுக்கு ஒரு ஞானியா, தேவ பிள்ளையா வாழ்ந்தாலும் அவனுடைய வாழ்க்கை தேவ வார்த்தைகளில் விலகும் போது, கண்டிப்பா கவனம் வைத்து, தேவ பாதைகளில் சென்றடையணும்…. இல்லைனா அவர்களுடைய வாழ்வு துவக்கத்தில் இந்த உலகமே பாராட்டுற வண்ணம் இருந்தாலும், அவர்களுடைய முடிவு ரொம்பவே மோசமானதா அதுவும் நரகமே பயப்படுற அளவுக்கு வேதனைகள் நிறைந்தா இருக்கும்னு தெரிந்து கொண்டேன்….. உண்மையில் எனக்கு அது ஒரு நல்ல பாடம் ஏஞ்சல். ஏன்னா அந்த சாத்தான் என்னை வரவேற்கும் போது, தேவ வார்த்தைகளின் இரகசியங்களை தெரிந்து கொண்ட சிறுபெண்ணே  வருக!!! சொன்னப்ப….. ஏதோ தேவ ஆசீர்வாதம் பெற்றவரே வருக…..அன்று சாலொமோன்… இன்று நீன்னு சொன்ன மாதிரியே இருந்துச்சு…..என்னுடைய கடைசி நொடி வரை,….. தேவ வார்த்தைகளில் நிலை நிற்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொண்டேன் ஏஞ்சல்.

    அடுத்து குளோரி அக்கா மூலமா…… அது ரொம்பவே வேதனையான பாடம் ன்னுதான் சொல்லணும் ஏஞ்சல். ஏன்னா அந்த அக்கா துயரங்கள் என்னையும் கஷ்டப்படுத்துச்சு. ஒரு தேவ பிள்ளைக்கு இந்த உலகத்தில எத்தனை விதமான சோதனைகள் காத்திட்டு இருக்கு என்பதை தெரிந்து கொண்டேன். வாழ்க்கையில் ஒரு தேவ பிள்ளையா சந்தோசமா ஆரம்பித்தாலும் சாத்தானின் தந்திரங்கள் எத்தனை இருக்கும் என்பதும் அதில விழுந்து போனா அது எத்தகைய விளைவை என்னில் உண்டு பண்ணும் என்பதையும் தெரிந்து கொண்டேன் ஏஞ்சல்….. கொஞ்சம் ஆழமான அதே நேரத்தில வேதனையான பாடம்……

    அடுத்தது தேவ ஊழியர்கள் பிள்ளைகளின் வாழ்கையில் நடக்கும் காரியம். ஒரு மனிதன் தன் தேவனுக்காக எந்த அளவுக்குத்தான் ஓடினாலும், அவனால தன் பிள்ளைகளின் ரட்சிப்புக்கு உத்திரவாதம் சொல்ல முடியாதுன்னு தெரிந்து கொண்டேன் ஏஞ்சல். என்னுடைய அம்மா, அப்பாவின் பரிசுத்தம் அவர்களுக்கு தேவ நியாய தீர்ப்பில் உதவுமே தவிர, அது என்னை எந்த வகையிலும் தேவ நியாய தீர்ப்பில் தயவு காண்பிக்க உதவியாக இருக்காதுன்னு தெரிந்து கொண்டேன்….. என்னுடைய ஆத்துமா தேவ நியாய தீர்ப்பில் சந்தோசமா இருக்க விரும்பினா அது நான் செய்யும் நன்மைகளை பொறுத்து அமையும்….. சரிதான ஏஞ்சல்.

    குட்….. நம்ம இயேசப்பா உனக்கு நிறைய காரியங்களை சொல்லி கொடுத்ததை அழகாக நீயும் புரிந்து வைச்சிருக்க. இது நல்ல விசயம். இது முழுக்க முழுக்க நம்ம தேவன் உனக்கு கொடுத்த தேவ ஆவியானவரால் நடந்த காரியம். இந்த எல்லா பாடங்களை குறித்தும் அழகாக சொல்லிட்ட. ஆனா ஒரு காரியம் மட்டும் நீ மறந்து போயிட்ட…… என்னன்னு உன்னால சொல்ல முடியுமா? கேள்வியோடு நோக்கினார்.

    மண்டையை போட்டு உருட்டி கூட யோசித்து பார்த்தாள். ம்கூம்….. பதிலை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    என்னவா இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஏஞ்சலின் உதவியை நாடலாமா எண்ணத்தோடு அவள் ஏஞ்சலின் முகத்தை நோக்கினாள்.

    நீ முதன் முதலில் நரகத்தில் நுழைந்ததும் ஒரு குழந்தையை தெரியாம வேதனைபடுத்திட்டு அதன் மூலமா அந்த நரகத்தில வந்து கஷ்டப்பட்ட ஒரு ஆத்துமாவை குறித்து பூதங்கள் பேசிட்டு இருந்ததை நீயும் கேட்டிருப்ப. அதன் மூலமா என்ன தெரிந்து கொண்ட குட்டிமா……

    உண்மையில் அது அவளுக்கும் ஆச்சர்யமான காரியம்தான். சாரி ஏஞ்சல்….. எனக்கு அந்த காரியம் மட்டும் புரியவே இல்லை. நான் உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சிருந்தேன்…….

    நீ அந்த ஆத்துமாவை குறித்து சரியா தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உனக்கு அதை பத்தி தெளிவா சொன்னா நீ புரிஞ்சுக்குவ ன்னு நினைக்கிறேன். அந்த குழந்தையை தெரியாம கொன்னதா அந்த பூதங்கள் சொல்லி நீயும் கேட்டிருப்ப…… சரியா

    ஆமா ஏஞ்சல்….. நானும் கூட நினைத்தேன். சப்போஸ் அந்த ஆளு அந்த குழந்தையை கடத்தி இருப்பாரோன்னு. ஆனா அந்த பூதங்கள் சொல்லிகிட்டாங்க. தெரியாம செய்த தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனையான்னு….. கடைசியில குழப்பம் மட்டுமே வந்துச்சு….. நான் வேற என்னை மாதிரியே ஒத்து வருதுன்னு கூட நினைச்சிகிட்டேன். ஏஞ்சல் என்ன பதில் சொல்லுவார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தாள்.

    அந்த குழந்தை அந்த ஆத்துமாவுடைய குழந்தைதான்……… ஏஞ்சல் சொல்ல ஆரம்பித்த போது உண்மையில் அவளால் நம்ப கூட முடிய வில்லை.

    குட்டிமா, அந்த ஆத்துமாவும் ஒரு காலத்தில் நம்ம தேவனில் ரொம்பவே பிரியமா இருந்த ஆத்துமாதான். ஆனா நாளடைவில் நம்ம தேவன் செய்த எல்லா நன்மைகளையும் மறந்து போயிருச்சு. எல்லாருக்கும் நல்லவனா இருந்தா போதும் என்கிற மனபான்மையோடு நடக்க ஆரம்பித்து, தேவ உன்னத வழியை மறுத்த ஆத்துமா…… உன்னத வழின்னா உனக்கு தெரியுமா……

    கொஞ்சம் தெரியும் ஏஞ்சல். இந்த உலகத்தில இருக்கிற யாராய் இருந்தாலும் அவங்க பரலோகத்திற்கு போகணும்ன்னு ஆசைபட்டா அது நம்ம இயேசு கிறிஸ்து மூலமா மட்டுமே செல்ல முடியும். வேற வழியை தெரிந்து கொள்ளுரவங்க நரகத்தில் மாட்டி கொள்ளுறது நிஜமான காரியம்……

    சரியா சொன்ன. ஆனா இந்த ஆத்துமா ஆரம்பித்தில தேவ தயவை, நம்ம இயேசப்பாவுடைய அன்பை மட்டும் சார்ந்து வாழ்ந்து இன்பம் பார்த்தது, ஒரு கட்டம் வந்த பிறகு அதை எல்லாத்தையும் மறந்து உலக உபதேசங்களை விரும்ப ஆரம்பித்தது. தன் கிரியைகளால் மட்டுமே பரலோகத்திற்கு மட்டுமே போக முடியுமே தவிர, இயேசப்பா, இயேசப்பான்னு சொல்லிட்டே இருக்கிறதால போக முடியாதுன்னு எண்ணம் மனதில பதிந்து போனது.

    ரொம்பவே கவனமாக கேட்டு கொண்டிருந்தாள். நம்ம இயேசப்பாவை தன் முதல் பாதியில் நேசித்ததால நம்ம இயேசப்பாவும் நிறைய முறை வந்து தன் வார்த்தைகளால் இழுக்க பார்த்தாங்க. ஆனா….. இயேசப்பா உங்க வார்த்தைபடிதான செய்திட்டு இருக்கேன். நீங்க என்ன சொல்லி இருக்கீங்க பைபிள்ல. வெறும் இயேசப்பா….. இயேசப்பான்னு சொல்லுறவங்களால பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது. தேவ வார்த்தைகளின் படி செய்கிறவங்களால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். நீங்க சொன்னதைதான் செய்யுறேன். அப்ப எதுக்கு என் மேல் குற்றம் காணுறீங்க…….. சொல்லி கொண்டிருக்கும் போதே….

    ஏஞ்சல் ஒரு நிமிஷம். அந்த ஆத்துமா தேவ வார்த்தைகளின் படிதான நடக்க ஆசைப்பட்டது. அப்ப எதுக்கு நம்ம தேவன் வேதனைபட்டாங்க…..

    குட்டிமா, எந்த மனிதனும் தன்னால எந்த வகையிலும் ஒரு நல்லமனிதனா, எந்த மாசோ. கறையோ இல்லாத வண்ணம் வாழ முடியாது. அவன் அப்படி வாழணும்னு ஆசைபட்டா நம்ம தேவ உதவியை கேட்டு வாங்கி கொள்ளணும். ஏன்னா யாராலயும் அவ்வளவு ஈஸியா பரலோக பாதையை கண்டுபிடிக்க முடியாது. அதை தெரிவிக்கவரும், அதில நம்மை கூட்டிட்டு போகிறவரும், நம்மளை ரொம்பவே பத்திரமா பரலோகத்துல சேர்க்கிறதுக்கும் ஒருத்தரால் மட்டுமே முடியும். அது நம்ம இயேசப்பாதான். அவர் உதவி இல்லாம எப்படி அந்த பாதையை ஒரு மனிதனால கண்டுபிடிக்க முடியும். அப்படி இயேசப்பாவை விட்டுட்டு ஒருத்தன் அந்த பாதையை கண்டுபிடிச்சிட்டேன்னு சொன்னா அவன் நரகத்திற்கு நேரா தன் பிரயாணத்தை ஆரம்பிச்சிட்டான்னு அர்த்தம்…….

    ஆனா ஏஞ்சல்….. நம்ம இயேசப்பா எல்லாத்தையும் பார்த்துக்குவாங்கன்னு சும்மா உட்கார்ந்திருந்தா கூட தப்புத்தான. அந்த மனிதன் எனக்கு தேவ வார்த்தைகள் தெரியும். அதுனால அவர் சொன்ன வார்த்தையின் படி வாழ போறேன்னு நல்ல டெசிசன்தான எடுத்துருக்கார்…….. அப்ப அது எப்படி தப்பாக முடியும் ஏஞ்சல்.

    குட்டிமா, நீ சரியா புரிந்து கொள்ளலை. இந்த உலகத்தில மட்டும் நான் நல்லவன் என்கிற பெயரை வாங்கினா போதும். அதுவும் எந்த நடிப்போ இல்லாம வாங்கினா போதும்ன்னு சொல்லுற மாதிரி இருக்கு. அப்படி ஒருத்தனால் தானே நல்லவனா வாழ வழி இருந்தா நம்ம இயேசப்பா எதற்காக சிலுவையில் மரிக்கணும்……..

    சரிதான…… மனதிற்குள் சொல்லி கொண்டாள்.

    உன்னை நீயே எடுத்துக்கோ…… நீ உன்னுடைய தப்பால நரகத்திற்கு போன….. அங்க இருந்து உன்னை திரும்பவும் இங்க கூட்டிட்டு வந்தது யாரு…..

    என்னுடைய இயேசப்பா ஏஞ்சல்.

    உன்னுடைய இயேசப்பா உதவி இல்லாம உன்னால எந்த அளவுக்கு பரலோக பாதையில சரியா நடக்க முடியும்……

    சாரி ஏஞ்சல். எனக்கு புரிஞ்சிருச்சு. பாதையே அவர்தான். அவரை மறுத்திட்டு என்னால எப்படி பரலோகம் முடியும். அதுவும் இந்த நெருக்கமான, இடுக்கமான பாதையில் நான் புறப்பட தயாராகிட்டேன் தெரிந்தாலே….. என்னை போக விடாம தடுக்கத்தான் சாத்தான் இருக்கானே…. அப்ப எப்படி வழிகாட்டி இல்லாம போக முடியும். அப்படி அவர் உதவி இல்லாம நான் போனாலும் சில தவறுகள் நடக்கும் போது, சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேணுமே…..இல்லாட்டி நான் நல்லா இருக்கும்ன்னுதான் அந்த காரியத்தை செய்தேன். ஆனா எப்படி தப்பாச்சு…..ன்னு குழப்பம் மட்டும்தான் வரும்……

    நீ சொன்னது சரி குட்டிமா. நாம எல்லாரும் அவருடைய ஆடுகள். அவர் நமக்கு மேய்ப்பரா இருக்காங்க. அதுனால அவர் காண்பிக்கிற பாதையில் கவனமா செவி கொடுத்து போனா மட்டுமே போக முடியும். வெறும் இயேசப்பான்னு சொன்ன கூட அதுனாலத்தான் காரியம் வாய்கிறதில்லை. அவர் வார்த்தைக்கு கவனமா செவி கொடுத்து, அவர் செயல்களை செய்ய ஒப்பு கொடுக்கிற ஒரு மனிதனால் மட்டுமே, அவர் செய்ய நினைக்கிற காரியத்தை சரியா செய்ய முடியும். அப்ப என்ன மனதில எதுக்கு தேவையில்லாத வேதனை வரப் போகுது….. தேவையில்லாம தப்பு செய்திட்டேன் புலம்பி மரணத்திற்கு நேரா துணிந்து முடிவு எடுக்க வேண்டியது வரப் போகுது……. தேவனுடைய அமர்ந்த சத்தத்தை கேட்க முடியாத காரணத்தினால் தான தைரியமா அந்த ஆத்துமாவும், குளோரியும் தப்பான முடிவு எடுத்தாங்க.

    சரி……மனதின் ஆழத்தில் உச்சரித்து கொண்டாள்.

    ஏஞ்சல்….. நான் என்ன தப்பு பண்ணினேன்னு தெரிந்து கொண்டேன். நான்  ரேஷ்மிக்கு விரோதமா காரியத்தை செய்திட்டு, நானா செய்திட்டேன் புலம்பிட்டு இருந்தது உண்மை…. அதாவது எனக்கு என்னுடைய இயேசப்பாவின் வல்லமையை விட…. நான் செய்த தப்புதான் கண் முன் இருந்ததே தவிர, அதற்கு என்ன தண்டனை வரும் என்பதை தெரிந்து கொண்டேனே தவிர அந்த நேரத்தில கூட என்னை ஆறுதல் படுத்த என் இயேசப்பா இருக்காங்க என்பதை மறந்தே போனேன். அந்த ஆத்துமா, குளோரி அக்கா தெரிந்தே தற்கொலை முடிவு எடுத்தாங்க. நான் கூட அவங்க மாதிரிதான். இப்ப கூட போனா என் இயேசப்பா நான் செய்த தப்புக்கு மன்னிப்பு தருவது மட்டுமில்ல அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வரவும் உதவி செய்ய ரெடியா இருக்காங்க என்பதை மறுத்து, நரகம் போக தயாரா இருந்தேன் என்பது உண்மை…. சரியா ஏஞ்சல்.

    சரி குட்டிமா….. நீ தேவன் காண்பித்த பரலோக பாதையில் போயிட்டிருக்க. அதுனால நீ போயிட்டிருக்கிற பாதையில் இருந்து உன்னை விலக்க சாத்தான் எதையும் செய்வான். நீ தேவனின் வார்த்தைகளை கவனமா செவி கொடுத்தா நெருங்கி வருற அவன் தந்திரங்களை தோற்கடிச்சிட்டு முன்னேற முடியும். அதை விட்டுட்டு அவர் வார்த்தைக்கு செவி கொடுக்காம இருக்கும் போதே தப்பு தானே நுழைஞ்சிரும். தப்பு நடந்திருச்சே…..ன்னு புலம்பி நரகத்திற்கு போறதுதான் சரியான தண்டனை ன்னு நீங்களே முடிவு பண்ணி, வேதனை படுகிறதை விட, அந்த நேரத்தில கூட தேவன் தோள்களில் எப்படி தாவீது சாய்ந்து கொண்டு, தன் தப்புக்கான தண்டனைகள் முடியுற வரைக்கும் அவர் நிழலை விட்டு வெளியே வாரம இருந்தாரோ, அதே மாதிரி அவர் கைகளில் தப்புக்கு அடி கிடைக்க உங்களை ஒப்பு கொடுக்கிறதுதான் நம்ம தேவன் உங்ககிட்ட எதிர்பார்க்கிற காரியம்……………

    சாரி ஏஞ்சல்….. நான் எதுக்கு நரகம் போனேன்னு இப்ப தெரிஞ்சுகிட்டேன். நானா செய்த தப்புக்கு நரகத்தில தான் தண்டனை இருக்கும் என்கிற எண்ணத்தின் படிதான் எனக்கு காரியம் நடந்தது. யோபு தாத்தா சொன்னது உண்மை….. நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது….. நான் கண்டிப்பா என் இயேசப்பா சொன்ன வார்த்தைகளை ஏத்துக்க மறுத்திருப்பேன்…. என் பொறாமை குணத்தால். அடுத்து தப்பு செய்த பிறகும் நானே செய்த தப்புக்கு நரகம் காத்திட்டிருக்குன்னு என்னுடைய தீர்ப்பின் படி எனக்கு நடந்திருச்சு……

    சரி குட்டிமா….. ஆனா இன்னொரு காரியத்தையும் ஞாபகத்தில வைச்சுக்கோ. உன்னுடைய தப்புகளின் முடிவில் நீ இயேசப்பாவுடைய தயவை எதிர்பார்த்து காத்திருப்பது செய்ய வேண்டிய காரியம்தான். ஆனா தப்பை பண்ணிட்டு பண்ணிட்டு, அவர் சமூகத்தில கிருபைக்காக நிற்க முடியாது. ஏன்னா உன்னுடைய கிருபையின் காலங்கள் எவ்வளவுன்னு உனக்கு தெரியாதே. அதுனால தேவ வார்த்தைகளுக்கு கவனமா செவி கொடுத்து, அவர் காண்பிக்கிற பாதையில் போறது மட்டுமே சால சிறந்தது……

    சாரி இயேசப்பா….. என்னுடைய தப்பு மட்டுமே எனக்கு அப்ப கண்ணுக்கு தெரிந்ததே தவிர, அப்ப கூட என்னை தப்பிக்க வல்லவராய் இருந்த உங்க மேல நான் என் கண்ணை வைக்க தவறினதற்காக சாரி  பிரெண்ட்,  இனிமே என்றும் உங்க மேல மட்டும் என் கண்கள் வைக்க உதவி செய்யுங்க, ப்ளீஸ்……

    ஆமென்….. இருவரும் ஒரு சேர சொல்லினர். 

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − six = 3

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>