ஸ்தோத்திரங்கள் 951-1000

951

என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன், ஆபத்தில் நானே அவனோடிருந்து அவனைத் தப்பவித்து கனப்படுத்துவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 91:15

952

நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்கு காண்பிப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 91:16

953

கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தை கைவிடாமலும் இருப்பார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 94:14

954

உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 128:2

955

உனக்குப் பாக்கியமும் நன்மையும் உணடாயிருக்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 128:2

956

உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சைக் கொடியைப் போலிருப்பாள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 128:3

957

ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  யோவான் 12:26

958

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 128:5

959

உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 128:6

960

உன் சந்ததி மேல் என் ஆவியையும் உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 44:3

961

உன்னோடு வழக்காடுகிறவர்களோடு நான் வழக்காடி உன் பிள்ளைகளை இரட்சித்துக் கொள்வேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 49:25

962

உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள. உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாயிருக்கும் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 54:13

963

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராமலும் இருக்கும் என்று உம்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 54:10

964

என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விழங்கும் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  2கொரிந்தியர் 12:9

965

இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  சகரியா 9:12

966

சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 34:10

967

நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 32:8

968

ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப் படுத்துவாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 50:15

969

எனனை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  எரேமியா 33:3

970

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  மத்தேயு 7:7

971

தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  மத்தேயு 7:7

972

தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  மத்தேயு 7:7

973

இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  மத்தேயு 18:20

974

இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களோடு கூட இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  மத்தேயு 28:20

975

நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 41:10

976

நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 41:10

977

என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 41:10

978

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் யாவருக்கும் சம்பூரணமாக கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  யாக்கோபு 1:5

979

பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 41:13

980

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  யோசுவா 1:5

981

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  யோசுவா 1:5

982

நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  நீதிமொழிகள் 23:18

983

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீஙகள் சும்மாயிருப்பீர்கள் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  யாத்திராகமம் 14:14

984

இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காண மாட்டீர்கள் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  யாத்திராகமம் 14:13

985

யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதமில்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதலுமில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  எண்ணாகமம் 23:23

986

ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ, அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 49:15

987

இதோ, என் உள்ளங் கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன், உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 49:16

988

நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 45:2

989

நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன் என்றீர் ஸ்தோத்திரம்.  ஏசாயா 43:2

990

நீ ஆறுகளைக் கடக்கும் போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை என்றீர் ஸ்தோத்திரம்.  ஏசாயா 43:2

991

நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய், அக்கினி ஜீவாலை உன் பேரில் பற்றாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 43:2

992

நீ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  உபாகமம் 23:12

993

கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  உபாகமம் 28:14

994

நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப் படுவதில்லை என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 49:23

995

அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  நீதிமொழிகள் 27:18

996

நித்திய ஜீவனை அளிப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  1யோவான் 2:25

997

நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  எபிரேயர் 6:14

998

ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன் ஆயத்தம் பண்ணின பின்பு நான் இருக்கிற இடத்தில் நீங்களும் இருக்கும்படி; நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  யோவான் 14:2,3

999

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  யோவான் 14:27

1000

இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  வெளிப்படுத்தின விசேஷம் 12:22