ஸ்தோத்திரங்கள் 901-950

901

பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகள் மடியில் சரிகட்டுகிறவரே ஸ்தோத்திரம்.  நீதிமொழிகள் 8:29

902

சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 2:18

903

முற்றுமுடிய இரட்சிக்க வல்லவரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 7:25

904

வழுவாதபடி எங்களைக் காக்க வல்லவரே ஸ்தோத்திரம்.  யூதா 1:24

905

தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே எங்களை மாசற்றவர்களாக நிறுத்தவல்லவரே ஸ்தோத்திரம்.  யூதா 1:24

906

எங்களை ஸ்திரப்படுத்த வல்லவரே ஸ்தோத்திரம்.  ரோமர் 16:26

907

எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே, முடித்தவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 57:2

908

மரணபரியந்தம் எம்மை நடத்துகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 48:14

909

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்ற வாக்குதத்திற்க்காக ஸ்தோத்திரம்.  மத்தேயு 11:28

910

எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு ஸ்தோத்திரம்.  தானியல் 9:10

911

உம்முடைய இறக்கம் உமக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.  லூக்கா 1:50

912

சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து மகிமையும் கனத்தையும் அழியாமையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பீர் ஸ்தோத்திரம்.  ரோமர் 2:7

913

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் ஸ்தோத்திரம்.  ரோமர் 6:23

914

ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய, இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் ஸ்தோத்திரம்.  யோவான் 17:3

915

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய் என்ற வாக்குதத்திற்க்காக ஸ்தோத்திரம்.  1தீமோத்தேயு 6:12

916

அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த நம்மை உயிர்ப்பித்ததற்காக ஸ்தோத்திரம்.  எபேசியர் 2:1

917

உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என்னுடைய ஆலோசனைக்காரருமாயிருக்கிறது ஸ்தோத்திரம்.  சங்கீதம் 119:24

918

உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமள தைலமாயிருக்கிறது ஸ்தோத்திரம்.  உன்னதப்பாட்டு 1:3

919

ஐசுவர்யமும், கனமும், நிலையான பொருளும் , நீதியும் உடையவரே ஸ்தோத்திரம்.  நீதிமொழிகள் 8:18

920

உம்முடைய ஆசீர்வாதம் ஐசுவர்யத்தை தருவதற்காக ஸ்தோத்திரம்.  நீதிமொழிகள் 10:22

921

சந்தோஷப்பட்டு களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும் என்ற வாக்குதத்திற்க்காக ஸ்தோத்திரம்.  மத்தேயு 5:12

922

தண்ணீரை திராட்ச ரசமாக மாற்றினீர் ஸ்தோத்திரம்.  யோவான் 2:9

923

பிறவிக் குருடர், செவிடர் ஊமையானவர்களை காணவும் கேட்கவும், பேசவும் வைத்தீர் ஸ்தோத்திரம்.  யோவான் 9:7; மத்தேயு 9:33

924

முடவர், சப்பாணிகள், கூனர், சூம்பின உறுப்படையோர், திமிர்வாதக்காரரை சுகமாக்கினீர் ஸ்தோத்திரம்.  மத்தேயு 8:13

925

பிசாசின் வல்லமையில் பிடிபட்டிருந்தோரை விடுதலையாக்கினீர் ஸ்தோத்திரம்.  மத்தேயு 15:28

926

குஷ்டரோகிகளை சுத்தமாக்கினீர் ஸ்தோத்திரம்.  லூக்கா 17:14

927

மரித்த லாசரு, யவீருவின் மகள் நாயீன் ஊர் விதவையின் மகன் யாவரையும் உயிரோடெழுப்பினீர் ஸ்தோத்திரம்.  மாற்கு 5:42; யோவான் 11:44

928

காற்றையும் கடலையும் அமர்த்தினீர் ஸ்தோத்திரம்.  மத்தேயு 8:26

929

கடலின் மேல் நடந்தீர் ஸ்தோத்திரம்.  மத்தேயு 14:25

930

உமது வார்த்தையின்படி ஆழத்திலே வலை போட்ட போது திரளான மீன்களும், மற்றோரு முறை வலது பக்கத்திலே வலை போட்ட போது, 153 பெரிய மீன்களும் படிக்கச் செய்த அற்பதத்திற்காக ஸ்தோத்திரம்.  லூக்கா 5:6

931

வரிக்கான பணம் மீன் வாயில் கிடைக்கச் செய்தீர் ஸ்தோத்திரம்.  மத்தேயு 17:27

932

பெரும்பாடுள்ள ஸ்திரீயையும் பேதுருவின் மாமியையும், 38 வருடமாய் வியாதியாயிருந்த மனுஷனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம்.  மத்தேயு 8:15; மத்தேயு 9:22

933

5 அப்பம் 2 மீன் கொண்டு 5000 பேருக்கும் மேலானவரை போஷித்து மீதியானதை 12 கூடைகளில் நிரப்பச் செய்தீர் ஸ்தோத்திரம்.  மத்தேயு 14:20

934

7 அப்பமும் சில சிறு மீன்களும் கொண்டு 4000 பேருக்கும் மேலாக போஷித்தீர் ஸ்தோத்திரம்.  மத்தேயு 15:38

935

மல்கூஸின் வெட்டப்பட்ட காதை ஒட்ட வைத்தீர் ஸ்தோத்திரம்.  லூக்கா 22:51

936

உம்மைக் கொல்ல நினைத்த மக்களிடமிருந்து அற்பதமாய் நீர் மறைந்து போனீர் ஸ்தோத்திரம்.  லூக்கா 4:30

937

உம்மை பிடிக்க வந்த போர்ச்சேவகரின் கூட்டத்தை பின்னிட்டு விழச்செய்தீர் ஸ்தோத்திரம்.  யோவான் 18:6

938

சந்திரரோகியையும் நீர் கோவை வியாதியுள்ளவனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம்.  லூக்கா 14:2

939

அத்திமரம் உமது சாபத்தால் உடனே பட்டுப்போனது ஸ்தோத்திரம்.  மத்தேயு 21:19

940

மனிதனின் பாவ இருதயத்தை உம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவி அவனை புதிய சிருஷ்டியாக மாற்றும் மகத்தான இந்த உம் அற்பதத்திற்காக ஸ்தோத்திரம்.  2கொரிந்தியர் 5:17

941

அவர் (கர்த்தர்) உன்னை வேடனுடைய கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்பவிப்பார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 91:3

942

தமது சிறகுகளால் உன்னை மூடுவார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 91:4

943

அவர் செட்டைகளின் கிழ் அடைக்கலம் புகுவாய், அவர் சத்தியம் உனக்கு பரிசையும் கேடகமுமாகும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 91:4

944

இரவில் உண்டாக்கும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 91:5,6

945

உன் பக்கத்தில் ஆயிரம் பேரும் உன் வலது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 91:7

946

பெல்லாப்பு உனக்கு நேரிடாது வாதை உன் கூடாரத்தை அணுகாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 91:10

947

உன் வழிகளிளெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காய்த் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 91:11

948

உன் பாதம் கல்லில் இடறாதபடி (தூதர்கள்) தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 91:12

949

சிங்கத்தின் மேலும் விரியன் பாம்பின் மேலும் நீ நடந்து பால சிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 91:13

950

என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறவனை விடுவிப்பேன் என் நாமாத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 91:14