ஸ்தோத்திரங்கள் 651-700

651

தேவரீர் என் பட்சத்திலிருக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 56:9

652

பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்.  எரேமியா 20:11

653

என்னுடைய எல்லாப் பயத்துக்கும் நீங்கலாக்கி விட்டவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 34:4

654

என் இருதயத்தின் வேண்டுதல்களை எனக்கு அருள் செய்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 37:4

655

என்னை நீதிமானாக்குகிறவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 50:8

656

உமது இடதுகை என் தலைகீழிருப்பதற்கா, உமது வலதுகரம் என்னை அணைத்துக் கொள்வதற்காய் ஸ்தோத்திரம்.  உன்னதப்பாட்டு 2:6

657

உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருப்பதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 48:10

658

என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார், விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை ஸ்தோத்திரம்.  1இராஜாக்கள் 5:4

659

தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.  1இராஜாக்கள் 8:56

660

என் நீதியை வெளிச்சத்தைப் போலவும் என் நியாயத்தை பட்டப் பகலைப் போலவும் விளங்கப் பண்ணுவீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 37:6

661

என் பொருத்தனைகளைக் கேட்டதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 61:5

662

என் ஜெபத்தைத் தள்ளாமலிருந்த தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 66:20

663

தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலிருந்த தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 66:20

664

கிருபையினால் என்னைச் சந்திக்கும் தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 59:10

665

என் தாயின் கர்ப்பத்தில் என்னை காப்பாற்றினீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 139:13

666

நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 139:14

667

நான் உருவாக்கப்பட்ட போது என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை ஸ்தோத்திரம்.  சங்கீதம் 139:15

668

என் கருவை உம் கண்கள் கண்டதே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 139:16

669

கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 71:6

670

என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 71:6

671

என் சிறு வயது முதல் எனக்கு போதித்து வந்தீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 71:17

672

என் நோக்கம் நீரே கர்த்தாவே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 71:5

673

என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 56:8

674

என் மேன்மையை பெருகப் பண்ணி என்னை மறுபடியும் தேற்றுவீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 71:21

675

உம்முடைய ஆலோசனையின் படி என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக் கொள்வீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 73:24

676

என் காலைத் தள்ளாடவொட்டீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 121:3

677

என்னைக் காக்கிறவர் உறங்கமாட்டீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 121:3

678

பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் என்னை சேதப்படுத்துவதில்லை ஸ்தோத்திரம்.  சங்கீதம் 121:6

679

கர்த்தர் என்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 121:7

680

கர்த்தர் என் ஆத்துமாவை காப்பீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 121:7

681

என் போக்கையும் என் வரத்தையும் என்றென்றைக்கும் காப்பீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 121:8

682

என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 139:3

683

எனக்கு முன்பாக கடந்து போகிறவரே ஸ்தோத்திரம்.  உபாகமம் 9:3

684

கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 139:1

685

என் உட்காருதலையும் எழுந்திருக்குதலையும் அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 139:2

686

என் நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 139:2

687

என் நாவில் சொல் பிறவா முன்னே அதை நீர் அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 139:4

688

நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 139:3

689

நான் துன்பத்தின் நடுவே நடந்தாலும் என்னை உயிர்ப்பிப்பீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 138:7

690

என் ஆவி என்னில் தியங்கும் போது என் பாதையை அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 142:3

691

முற்பறத்திலும் பிற்பறத்திலும் என்னை நெருக்கி உமது கரத்தை என் மேல் வைக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 139:5

692

என்னை வெகுவாய்த் தண்டித்தும் சாவுக்கு என்னை ஒப்பக் கொடாததற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 118:18

693

விரோதிகளுடைய பற்களுக்கு எம்மை ஒப்பக்கொடாததற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 124:6

694

நான் கூப்பிட்ட நாளில் எனக்கு மறுஉத்தரவு அருளினீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 138:3

695

உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள் அவைகளுக்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 139:17

696

என் வாசல்களின் தாழ்ப்பாள்களை பலப்படுத்தி, என்னிடத்தில் உள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 147:13

697

என் எல்லைகளை சமாதானமுள்ளவைகளாக்குவதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 147:14

698

உச்சிதமான கோதுமையினால் என்னை போசிக்கிறவறே, கன்மலை தேனினால் என்னை திருப்தியாக்குபவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 81:16

699

எங்கள் மன விருப்பத்தின்படி எங்களுக்கு தந்தருள்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 21:2

700

எங்களுடைய தாழ்வில் எங்களை நினைத்தவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 136:23