ஸ்தோத்திரங்கள் 601-650

601

எனக்கு பொல்லப்பைதேடுகிறவர்கள் வெட்கி இலச்சை அடைந்தபடியால் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 71:24

602

உம்முடைய கற்பனைகளைக்கொண்டு என்னை, என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 119:98

603

என்னை உம் பேரில் நம்பிக்கையாயிருக்கப் பண்ணினீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 22:9

604

எங்களுக்கு முன்பாக பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளை துரத்திய கர்த்தரே ஸ்தோத்திரம்.  யோசுவா 23:9

605

என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டு போய் விடுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 23:2

606

என் ஆத்துமாவைத் தேற்றுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 23:3

607

என்னை நீதியின் பாதையில் நடத்துகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 23:3

608

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் தேவரீர் எனனோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 23:4

609

என்னைத் தேற்றும் உம் கோலுக்காக தடிக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 23:4

610

என் சத்துருக்களுக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்தினீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 23:5

611

என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 23:5

612

என் பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 23:5

613

என் ஜீவனுள்ள நாளெல்லாம் என்னைத் தொடரும் உம் நன்மைக்காக, கிருபைக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 23:6

614

என் கண்களுக்கு முன்பாக இருக்கும் உம் கிருபைக்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 26:3

615

நான் பெற்ற சகாயத்திற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 28:7

616

என் காலங்கள் உமது கரத்திலிருப்பதற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 31:15

617

தீங்கு நாளில் என்னைத் உமது கூடாரத்தில் மறைத்து வைப்பதற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 27:5

618

மனுஷனுடைய அகங்காரத்துக்கு உமது சமுகத்தின் மறைவில் என்னை மறைக்கிறதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 31:20

619

என்னை விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 144:2

620

நீர் என்னை குணமாக்கினீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 30:2

621

என்னை உயிரோடு காத்தீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 30:3

622

என் தகப்பனும் என் தாயும் கைவிட்டாலும் என்னை சேர்த்துக்கொள்கிற கர்த்தாவே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 27:10

623

என் இருதயத்தை ஸ்திரப் படுத்துகிற கர்த்தரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 27:14

624

நீர் என்னைத் கை தூக்கி எடுத்த படியால் உமக்கு ஸ்தோத்திரம்.  சங்கீதம் 30:1

625

என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்ற வாக்குதத்திற்க்காக ஸ்தோத்திரம்.  யாத்திராகமம் 33:14

626

பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 40:2

627

மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 9:13

628

என் ஆத்துமாவை பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணினீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 30:3

629

என் ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்திற்கு தப்பவித்தீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 86:13

630

என் ஆத்துமாவை மரணத்திற்கு தப்பவித்தீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 116:8

631

என் ஆத்துமாவில் பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 138:3

632

என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்கிறவரே ஸ்தோத்திரம்.  1இராஜாக்கள் 1:30

633

என் பாவங்கள் மூடப்பட்டதற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 32:1

634

என் மீறுதலை மன்னித்தீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 32:1

635

என் அக்கிரமங்களை எண்ணாதிருக்கிறீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 32:2

636

என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 32:5

637

என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டதற்காக ஸ்தோத்திரம்.  ஏசாயா 38:17

638

என் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, என் நோய்களையெல்லாம் குணமாக்கினீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 103:3

639

என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 103:4

640

என்னை கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டினதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 103:4

641

புது எண்ணெயால் என்னை அபிஷேகம் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 92:10

642

நன்மையால் என் வாயை திருப்தியாக்குகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 103:5

643

என் வாயில் தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டைத் தந்தீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 40:3

644

இரட்சண்யப் பாடல்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளும் படிச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 32:7

645

என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 30:11

646

என் இரட்டைக் களைந்து போட்டு மகிழ்ச்சியெனும் கட்டினால் இடைக்கட்டினீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 30:11

647

அன்பின் கயிறுகளால் (என்னை) கட்டி இழுப்பவரே ஸ்தோத்திரம்.  ஓசியா 11:4

648

என் மேல் நினைவாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 40:17

649

என்னை ஏற்றுக் கொள்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 40:15

650

என்னை ஆதரிப்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 55:22