ஸ்தோத்திரங்கள் 551-600

551

பாவிகளுக்கு வழியை தெரிவிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 25:8

552

உமக்கு பயந்தவர்களுக்கு உடன்படிக்கையை தெரிவிப்பதற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 25:14

553

தமது பரிசுத்தவான்களை கைவிடாத கர்த்தரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 37:28

554

தமது பரிசுத்தவான்களுக்கு சமாதானம் கூறுபவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 85:8

555

பரிசுத்தவான்களுடைய ஆலோசனை சபையில் மிகவும் பயப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 89:7

556

தம்மை சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 89:7

557

கேருபீன்களாலும் சேராபீன்களாலும் நித்தமும் போற்றப்படுகிறவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 6:3

558

என் தலையை உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 3:3

559

என் கொம்பை காண்டா மிருகத்தின் கொம்பைப் போல் உயர்த்துவீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 92:10

560

என்னை உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:33

561

என்னைத் தாங்குகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 3:5

562

என்னை சுகமாய் தங்கப் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 4:8

563

எனக்கு ஆதரவாய் இருந்தவரே, இருக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:18

564

என் விளக்கை ஏற்றுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:28

565

என் இருளை வெளிச்சமாக்குகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:28

566

என் செவியைத் திறந்தீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 40:6

567

என் விண்ணப்பத்தைக் கேட்டீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 28:6

568

என் அழுகையின் சத்தத்தைக் கேட்டவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 6:8

569

என் கண்ணீர் உம்முடைய துருத்தியில் அல்லவோ இருக்கிறது ஸ்தோத்திரம்.  சங்கீதம் 56:8

570

என் கண்களை கண்ணீருக்கு தப்பவித்தீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 116:8

571

என் காலை இடறலுக்கு தப்பவித்தீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 116:8

572

நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்கு துணையும் கேடகமுமானவர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 33:20

573

என் கால்களை வலைக்கு நீங்கலாக்குபவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 25:15

574

என் கால்களை மான் கால்கள் போலாக்குபவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:33

575

என் கால்கள் வழுவாத படி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:36

576

என் வழியை செவ்வைப் படுத்துகிற தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:32

577

என்னை விசாலமான இடத்தில் கொண்டு வந்தவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:19

578

த்துருக்களின் கையில் என்னை ஒப்பக் கொடாமல் என பாதங்களை விசாலத்திலே நிறுத்தினவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 31:8

579

நெருக்கத்திலிருந்த என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 118:5

580

எல்லா நெருக்கத்தையும் நீக்கி விடுவித்தீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 54:7

581

என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவரே ஸ்தோத்திரம்.  2சாமுவேல் 22:3

582

அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 60:9

583

என் கைகளை யுத்தத்திற்கு பழக்குவிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:34

584

என் கைகளை போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற கர்த்தாவே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 144:1

585

(என்) கை பிடித்து நடக்க பழக்குபவரே ஸ்தோத்திரம்.  ஓசியா 11:3

586

உமது அடியானை பட்டயத்துக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 144:10

587

யுத்தநாளில் என் தலையை மூடினதற்காய் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 140:7

588

என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது ஸ்தோத்திரம்.  சங்கீதம் 94:19

589

என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப் பண்ணீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:39

590

என்னை பெலத்தால் இடைக்கட்டுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:32

591

தேவன் எனக்கு பலத்தை கட்டளையிட்டதற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 68:28

592

அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன் ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக் கொள்கிறேன் என்றவரே ஸ்தோத்திரம்.  எரேமியா 31:3

593

என்னை உமது காருணியத்தால் பெரியவனாக்குகிறிர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:35

594

ஜாதிகளுக்கு என்னை தலைவனாக்குகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:43

595

ஜனங்களை எனக்கு கீழ்ப்படுத்துகிற தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:47

596

ஜனங்களின் சண்டைகளுக்கு என்னை தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:43

597

நாவுகளின் சண்டைகளுக்கு எம்மை விலக்கி காப்பாற்றுகிறதற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 31:20

598

எனக்காக பழிக்குப் பழி வாங்குபவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:47

599

என் சத்துருக்களுக்கு தீமைக்குத் தீமையை சரிக்கட்டுகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 54:5

600

என் சத்துருக்களுக்கு வரும் நீதி சரிக்கட்டுதலை காணும்படி செய்வீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 59:10